search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் நிறுவன சூப்பர்வைசர் தற்கொலை"

    வாங்கிய கடனை அடைக்க முடியாத வேதனையில் தனியார் நிறுவன சூப்பர்வைசர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    புதுக்கோட்டை அடுத்த மாத்தூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 41). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் டிரேடிங் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இதனால் இவர் தஞ்சையிலேயே தங்கி பணியாற்றி உள்ளார். குடும்பத்தினர் மட்டும் மாத்தூரில் உள்ளனர்.

    இந்த நிலையில் தான் பணியாற்றும் கம்பெனியின் முதல் தளத்தில் ராதாகிருஷ்ணன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மருத்துவக்கல்லூரி சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ராதாகிருஷ்ணன் உடலை கைப்பற்றி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ராதா கிருஷ்ணன் மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வீடு கட்டுவதற்காக ராதாகிருஷ்ணன் கடன் வாங்கியுள்ளார். மேலும் அவருக்கு சர்க்கரை வியாதியும் இருந்துள்ளது. கடனை அடைக்க முடியாத நிலையில அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன்காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலியை பார்க்க முடியாத ஏக்கத்தில் தனியார் நிறுவன சூப்பர்வைசர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரையில் பிளைவுட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஓம்கார்மிஸ்ரா (வயது22) என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சூப்பர் வைசராக பணியில் சேர்ந்தார்.

    அருகில் உள்ள ஊழியர் குடியிருப்பில் தங்கி ஓம்கார்மிஸ்ரா பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓம்கார்மிஸ்ரா தான் தங்கி இருந்த அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் மடுகரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்த ஓம்கார்மிஸ்ராவின் செல்போனை சோதனை செய்த போது அதில் பள்ளியில் படிக்கும் போதே ஒரு மாணவியை காதலித்து வந்ததும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பியதும் தெரியவந்தது.

    மேலும் தினமும் காதலியுடன் செல்போனில் பேசி வந்த ஓம்கார்மிஸ்ரா காதலியை நேரில் பார்க்க முடியாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இதுபற்றி ஓம்கார்மிஸ்ராவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் உடலை ஒப்படைக்க வரவழைத்துள்ளனர்.

    ×